செபமாலை
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.
இறைவா எங்களுக்குத் துணையாக வந்தருளும்
ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய விரைந்தருளும்.
அளவில்லாத சகல நன்மையும், சுரூயஅp;பியுமாய் இருக்கிற எங்கள் சர்வேசுராசாமி நீச மனுசருமாய் நன்றியறியாத பாவிகளுமாய் இருக்கிற, அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீர்க்குத் ஸ்துதி வணக்கமாகவும் அர்ச்சிஸ்ட தேவ மாதாவிற்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் செய்ய ஆசையாய் இருக்கிறோம். இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி.- ஆமென்
சகல புண்ணியங்களுக்குள் விசுவாசம் என்கின்ற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாசப்பிரமானம் சொல்லுகிறது:
2.பெரிய மணி : மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர்சுவாமி படிப்பித்த செபத்தை சொல்லுவோம்.
3.மூன்று சிறிய மணிகள் :
(1) பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக திரு மைந்தனை மன்றாடுவோம்.
(2) திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
(3) தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
4.மூன்று சிறிய மணிகளுக்குப் பின் (திரித்துவ துதி) :
5.ஒவ்வொரு மறை நிகழ்ச்சியாகச் சொல்லித் தியானிப்போம்.
சொல்வோம்.
6.ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும் :
ஓ என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ,
அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
7. முடிவு ஜெபங்கள்
மகிழ்ச்சி மறைபொருள்கள்
( திங்கள், சனி )
1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்குத் தூதுரைத்ததைத் தியானித்து, தாழச்சியுடன் வாழ வரம் கேட்போமாக.
2. இறையன்னை எலிசபெத்தைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பில் வளர்ச்சிக்காக செபிப்போமாக.
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமையை விரும்பி ஏற்று வாழும் வரம் கேட்போமாக.
4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்க வரம் கேட்போமாக !
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடி நிற்கச் செபிப்போமாக.
ஒளியின் மறைபொருள்:
(வியாழக் கிழமை)
1. இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
2.கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
3. இயேசு விண்ணரசை பறைசாற்றியதை தியானிப்போமாக !
4. தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !
துயர மறைபொருள்கள்
( செவ்வாய், வெள்ளி)
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
2. இயேசு கற்றூணில் கடடுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒறுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!
மகிமை மறைபொருள்கள்
( புதன், ஞாயிறு )
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசததுடன் வாழ செபிப்போமாக!
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ளக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !
முடிக்கிற வகையாவது
அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் தோதிரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக்கொள்கிறோம். ஆமென்.
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஜெபிப்போமாக :
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
ஜெபிப்போமாக
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)
பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக:
ஒரு பர, ஒரு அருள், ஒரு திரி.
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.
Pitha suthan parisutha aaviyin peyaraalae -Aamen.
Iraivaa engalukku thunaiyaaga vandharulum
Aandavarae engalukku udhavi seyya viraindharulum.
Pithaavukkum, suthanukkum, parisutha...
Alavillaatha sagala nanmaiyum, suroopiyamaai irukkira engal sarvaesuraasaami neesa manusarumaai nandriyariyaatha paavigalumaai irukkira, adiyoargalathu mattillaatha magimai pirathaapathai kondirukkira dhaevareerudaiya thiru sannithilae irundhu jebam panna paathiramaagaathavargalaayirundhaalum, dhaevareerudaiya alavillaatha dhayavai nambikondhu dhaevareerukku sthuthi vanakkamaagavum archishta dhaeva maathaavirku thoothiramaagavum aimbathu moondru mani jebam seyya aasaiyaai irukkiroom. Indha jebathai bhakthiyodae seythu, paraakkillaamal mudikka dhaevareerudaiya othasaiyai kattalai panniyarulungal swaami. -Aamen
Sagala punniyangalukkul visuvaasam engindra punniyam asthivaaramaai irukkirapadiyainaalae mundha mundha visuvaasappiramaanamm sollugirathu:
Visuvaasa arikkai...
2. Periya mani: Meyyaana iraivanum meyyaana manithanum ondraayirukkira iyaesunaatharswaami padippitha sebathai solluvom.
Iraivanin piraathanai...
3. Moondru siriya manigal:
(1) Paramanthaiyaam iraivanukku magalaai irukkira punitha iraiyannaiyae, engalidam visuvaasam palanalikkum padiyaaga thiru mainthanai manraaduvom.
Arul niraintha mariyae...
(2) Thirumaganaam iraivanukku thaayaai irukkira punitha iraiyannaiyae, engalidam nambikkai valarumpadiyaaga um thirumainthanai manraadum.
Arul niraintha mariyae...
(3) Thooya aaviyaaraagiya iraivanukku migavum aerpudaiyavaraai irukkira punitha iraiyannaiyae, engalidam anbu valarumpadiyaaga um thirumainthanai manraadum.
Arul niraintha mariyae...
4. Moondru siriya manigalukku pin (thirithuva thuthi):
Pithaavukkum, suthanukkum, parisutha...
5. Ovvoru marai nigazhchiyaaga solli thiyaanippom.
Iraivanin piraathanai... (1)
Arul niraintha mariyae... (10)
Pithaavukkum, suthanukkum, parisutha....(1)
Solluvom.
6. Ovvoru pathu manigal mudinthadhum:
O en iyaesuvae!
Engal paavangalai porutharulum.
Engalai naraga neruppilirundhu meettarulum.
Ellaaraiyum vinnulaga paathaiyil nadathiyarulum.
Umathu irakkam yaarukku adhigam thaevaiyo,
Avargalukku sirappaana udhavi puriyum.
7. Mudivu jebangal
Magizhchi maraiporulgal
(Thingal, Sani)
- Gabiriyael thoothar kannimariyaavukku thoothuraithathai thiyaanithu, thaazhchiyudan vaazha varam kaetpomaaga.
- Iraiyannai elisabethai santhithathai thiyaanithu, piraranbil valarchikkaaga sebippomaaga.
- Iyaesu piranthathai thiyaanithu, elimaiyai virumbi aerptu vaazhum varam kaetpomaaga.
- Iyaesuvaik koyilil kaanikkaiyaaga oppuk koduthathai thiyaanithu, iraivanin thiruvulathukku panindhu nadakka varam kaetpomaaga!
- Kaanaamar pona iyaesuvaik kandadainthathai thiyaanithu, naam avarai ennaalum thaedi nirka sebippomaaga.
- Oliyin maraiporul:
- (Viyaazha kizhamai)
- Iyaesu yorthaan aatril thirumuzhukku petrathai thiyaanippomaaga!
- Kaanaavoor thirumanathil iyaesu thanneerai thiraatchai irasamaaga maatriyathai thiyaanippomaaga!
- Iyaesu vinnarasai paraichaatriyathai thiyaanippomaaga!
- Thaabor malaiyil urumaatram petrathai thiyaanippomaaga!
- Iyaesu kadaisi iraa virunthundathaiyum narkarunai aerpaduthiyathaiyum thiyaanippomaaga!
- Thuyara maraiporulgal
- (Sevvaai, Velli)
- Iyaesu iratha viyarvai sinthiyathai thiyaanithu, nam paavangalukkaaga manathuyar adaiya sebippomaaga!
- Iyaesu katroonal kadundhu adippattathai thiyaanithu, pulangalai adakki vaazhum varam kaetpomaaga!
- Iyaesu mulmudi tharithathai thiyaanithu, nammaiyae orukkavum, ninthai tholvigalai magizhchiyudan aerkavum sebippomaaga!
- Iyaesu siluvai sumanthu sendrathai thiyaanithu, vaazhkkai sumaiyai porumaiyodu aerptu vaazha sebippomaaga!
- Iyaesu siluvaiyil araiyappattu iranthathai thiyaanithu, iyaesuvai anbu seyyavum, pirarai mannikkavum varam kaetpomaaga!
- Magimai maraiporulgal
- (Budhan, Gnaayiru)
- Iyaesu uyirthelunthathai thiyaanithu, uyirulla visuvaasathudan vaazha sebippomaaga!
- Iyaesuvin vinnaetrathai thiyaanithu, nambikkaiyudan vinnaga vaazhvai thaedum varam kaetpomaaga!
- Thooya aaviyaarin varugaiyai thiyaanithu, naam anaivarum aaviyaarin oliyaiyum anbaiyum pera sebippomaaga!
- Iraiyannaiyin vinnaerpathai thiyaanithu, naamum vinnaga magimaiyil pangupera sebippomaaga!
- Iraiyannai vinnaga mannaga arasiyaaga manimudi suottap petrathai thiyaanithu, nam annaiyin meedhu aazhntha bhakthi kolla sebippomaaga!
- Mudikkira vagaiyaavathu
- Adhithootharaana punitha mikkaelae, dhaevathoothargaalaana punitha gabiriyaelae, appoosthalargaalaana punitha iraayapparae, cinnapparae, arulapparae naangal ethanai paavigalaayirundhaalum, naangal vaendikonda indha aimbathu moondru mani jebathaiyum ungal thothirangalodae ondraaga kootti punitha dhaevamaathaavin thiruppaathathil paathakaanikkaiyaaga vaikka ungalai piraathithukollugiroom. Aamen.
Punitha dhaevamaatha piraathanai
Sarvaesuranudaiya parisutha maathaavae! Idho ummudaiya saranamaga odivanthom. Engal avasarangalilae naangal vaendik kollugiratharku paaraamugamaai iraathaeyum. Aaseervathikkappattavalumaai motchamdaiyavalumaayirukkira nithiya kannigaeyae! Sagala aapathukkalilaeyum nindru engalai tharkaathuk kollum. -Aamen.
Iyaesu kiristhuvin vaakkuruthigalukku naangal thagudhiyullavargal aagumbadi,
Sarvaesuranudaiya parisutha maathaavae engalukkaaga vaendikollum.
Jebippomaaga:
Iraivaa! Mulamanathodae thendanaaga vizhundhugidakkira indha kudumbathai paarthu eppozhudhum parisutha kanniyaana mariyaaludaiya vaenduthalinaalae, sagala sathurukkalin sarpanaiyilae nindru pirasannaraai dhayai seythu iratchiyum. Indha manraattukkalai ellaam engal aandavaraana iyaesunaatharudaiya thirumugathai paarthu engalukku thandharulum. -Aamen.
Kirubai dhayaapathu manthiram
- Iyaesu kiristhu naatharudaiya thiru vaakkuthathangalukku naangal paathiravaanagalaai irukkathakkathaaga
- Sarvaesuranudaiya parisutha maathaavae engalukkaaga vaendikollum. -Aamen.
- Jebippomaaga
- Sarva sakthiyudaiyavarumaai nithiyarumaai irukkira iraivaa! Muthibaerupetra kannithaayaana mariyaayinudaiya aathumamum sareeram thooya aaviyaarin anukkaragathinaalae dhaevareerudaiya thirumaganukku yogiyamaana peedamaayirukka aerkanavae niyamitharulineerae. Andha dhivviya thaayai ninaiathu magizhgira naangal avaludaiya irakkamulla manraadinalae ivvulagil sagala pollappukkalilaeyum nithiya maranathilaeyum nindru iratchikkappadumbadiku kirubai koorntaharulum. Indha manraattukkalaiyellaam engal aandavaraaghiya iyaesunaatharudaiya thirumugathai paarthu engalukku thandharulum. -Aamen.
Punitha bernadhathu kannimariyidam vaendina jebam
Jenmapaavamillaamal urpavitha archishta mariyaayae, paavigalukku adaikkalamae, idho ummudaiya adaikkalamaaga odivanthom. Engal paeril irakkamaayirundhu engalukkaaga umathu thirukkumaaranai vaendikollum. -Arulniraintha (moondru murai)
Parisutha paapparasarin karuthukkal niraiverum padiyaaga:
Oru para, oru arul, oru thiri.
Pitha suthan parisutha aaviyin peyaraalae -Aamen.